பிரதமர் மோடி பிறந்தநாள் மற்றும் சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு சென்னை பஸ் ஸ்டாண்ட் நகர் ஆள்காட் மெமோரியல் பள்ளியிலிருந்து நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தை மத்திய தகவல் ஒளிபரப்பு மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி டாக்டர் எல் முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த சர்வதேச கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனையும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான அனிதா பால்துரை கலந்து கொண்டுள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி பேசியுள்ளார். அப்போது 8000 கிலோ மீட்டர் பரந்து விரிந்து இருக்கின்ற இந்திய கடற்கரையில் எண்ணற்ற வளங்கள் பொதிந்து கிடைக்கிறது. கடலை பாதுகாக்கும் நோக்கத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விளையாட்டை ஊக்குவிக்க பிரதமர் நரேந்திர மோடி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கேலோ இந்தியா ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு விளையாட்டு மைதானம் என்பதை எடுத்துக்காட்டாக தெரிவிக்கலாம் என கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்ற கடற்கரை தூய்மை இயக்கம் எனும் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட மத்திய மந்திரி பேசும்போது கொரோனா தொற்று பாதிப்பு இருந்த போதும் கடல்சார் பொருட்களின் உற்பத்தி அதிகமாகவே இருந்துள்ளது. இத்தகைய கடல் அன்னையை தாய் நாட்டைப் போல் போற்றி பாதுகாக்க வேண்டும். மேலும் வருங்கால சந்ததியினருக்கு இயற்கை வளங்களை அளிக்க வேண்டும் அதனால் கடலை கடற்கரையை பாதுகாப்பாக வைத்திருக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. நூறாவது சுதந்திர தினத்தில் இந்தியா உலகிற்கே வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதை நோக்கி நாம் அனைவரும் உழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பெசன்ட் நகர் கடற்கரை தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளார்.