நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால் அதில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன.
அதன்படி சுண்டைக்காயில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. இது சர்க்கரை நோயை தடுக்க பெரிதும் உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் இதனை சாப்பிடுவது மிகவும் நல்லது. எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் மற்றும் வெந்தயம் ஆகியவற்றை போட்டு, பின்பு வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும். அதன் பிறகு எடுத்த சுண்டைக்காயைப் போட்டு நன்றாக வதக்கிய பிறகு, மிளகாய், மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து ஊற வைத்த புளியை கரைத்து ஊற்றி நன்கு கிளறி கொதிக்க விடவும். இந்த சுண்டைக்காய் குழம்பு சுவையுடன் சர்க்கரை நோயும் கட்டுக்குள் வைக்கிறது.
உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு சுண்டைக்காய் அருமருந்தாக அமைகிறது. சுண்டைக்காய் வற்றலை பொடி செய்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். இதை அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொண்டால் ரத்த சோகை குணமாகும். சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி, முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கக் கூடியவை. முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.