Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சர்க்கரை நோயாளிகளே…. “வாரம் ஒரு முறை வெந்தயக்கீரையை இப்படி சூப் செய்து சாப்பிடுங்க”…!!

சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயக் கீரை என்பது ஒரு வரப்பிரசாதம். அப்படிப்பட்ட வெந்தயக்கீரையை வாரம் ஒரு முறை இதேபோல் சூப் வைத்து குடித்தால் மிகவும் நல்லது. அதை எப்படி செய்வது என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.

தேவையானவை

வெந்தயக் கீரை – ஒரு கப்.
பெரிய வெங்காயம் – 1.
தக்காளி – 1.
சோள மாவு – ஒரு டீஸ்பூன்.
பூண்டு – 4 பல்.
வெண்ணெய் – சிறிதளவு.
காய்ச்சிய பால் – அரை டம்ளர்.
மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வெந்தயக் கீரை, வெங்காயம், தக்காளியைப் நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் சிறிது வெண்ணெயை விட்டு வெங்காயம், தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும். பின்னர் தேவையான தண்ணீர் சேர்த்து, கொதிக்க வைக்கவும். நன்கு கொதிக்கும் போது வெந்தயக் கீரை மற்றும் பூண்டினை சேர்த்து, மேலும் கொதிக்கவிடவும்.

காய்ச்சிய பாலில் சோள மாவை கரைத்து இதில் சேர்க்கவும். எல்லாம் ஒன்றாக சேர்ந்து கொதித்ததும் அடுப்பை அணைத்துவிடவும். இந்த சூப்பில் தேவையான உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு. இந்த ‘வெந்தயக் கீரை சூப்’ சர்க்கரை நோயாளிகளுக்கு அருமையான உணவு மட்டுமல்ல. சிறந்த மருந்துமாகும். காலை உணவுடன் சூப் அருந்தும் பலருக்கும் ‘வெந்தயக் கீரை சூப்’ மிகவும் ஏற்றது.

Categories

Tech |