Categories
உலக செய்திகள்

“சரியான நேரத்திற்காக காத்திருக்கிறேன்”…. உக்ரைனுக்கு செல்ல இருக்கும் போப் பிரான்சிஸ்…. உலக தலைவர்களிடம் மீண்டும் கோரிக்கை….!!

உக்ரைன் நாட்டிற்கு செல்ல விரும்புவதாகவும், சரியான நேரத்திற்காக காத்திருப்பதாகவும் போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.

உக்ரைன் ரஷிய இடையிலான போர் 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரினால் இரு தரப்பிலும் அதிக அளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் உக்ரைனிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த போரை நிறுத்துவதற்காக சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளது. குறிப்பாக வாடிகன் தேவாலயத்தின் போப் பிரான்சிஸ், போரை முடிவுக்கு கொண்டு வர, உலக நாடுகளின் தலைவர்கள் தீவிரமாக முயற்சிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் உக்ரைனுக்கு செல்ல விரும்புவதாகவும் சரியான நேரத்திற்காக காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். என் நிலையில் செயிண்ட்  பீட்டர் சதுக்கத்தில் நேற்று உரையாற்றிய போப் பிரான்சிஸ் “மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக் கூடிய அழிவு மற்றும் மரணத்தின் சீற்றங்கள் தற்போது அதிகரித்து வரும் இந்த வேளையில், உலக நாடுகளின் தலைவர்களிடம் மீண்டும் நான் கோரிக்கை வைக்கிறேன், தயவுசெய்து மனிதகுலத்தை அழிவுக்கு கொண்டு செல்லாதீர்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |