Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“சரியாக விநியோகம் செய்யவில்லை” பொதுமக்களின் திடீர் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள குஞ்சுவெளி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் முத்துவாஞ்சேரி-அரியலூர் சாலையில் காலி குடங்களுடன் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீராக குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன் பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |