நடிகர் ஆர்யா அண்மையில் நடித்த திரைப்படங்கள் பெரியளவில் அவருக்கு வெற்றியை தேடித் தரவில்லை. “சார்பட்டா” திரைப்படத்துக்கு பின் அவர் நடித்த எனிமி, கேப்டன் படங்கள் தோல்வியை தழுவியது. இதன் காரணமாக மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஆர்யா உள்ளார். இவ்வாறு அடுத்தடுத்த படங்கள் தோல்வியடைந்த நிலையிலும் தன் சம்பளத்தை 2 மடங்காக ஆர்யா உயர்த்தியிருக்கிறார் என்கிறார்கள்.
முத்தையா இயக்கத்தில் உருவாகிவரும் புது படத்தில் நடிக்க அவர் ரூபாய்.10 கோடி சம்பளம் கேட்டுள்ளார். தயாரிப்பாளர் தரப்பில் பேச்சுவார்த்தை நடந்த போதும் சம்பள விஷயத்தில் ஆர்யா விட்டுக் கொடுக்காமல் இருந்து இருக்கிறார். இதனால் அவர் கேட்ட சம்பளமே வழங்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் தயாரிப்பாளர்கள் ஆர்யாவை அணுக தயக்கம் காட்டி வருகின்றனர். என்னதான் இருந்தாலும் இப்படி கெடுபிடி காட்டலாமா..? என தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். எனினும் ஆர்யா கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறாராம்.