Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சமைத்து கொண்டிருந்த முதியவர்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

சமைத்து கொண்டிருக்கும் போது முதியவர் மீது தீ பிடித்து அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள முத்துக்காளிப்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் வரதன்(70) என்ற முதியவர் தனியாக வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவர் விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து அருகே இருந்த கட்டிலில் படுத்து இருந்த போது திடீரென அடுப்பில் இருந்து தீ கட்டிலில் இருந்த போர்வை மீது பற்றியுள்ளது.

மேலும் தீ வரதன் மீதும் பற்றிய நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற ராசிபுரம் போலீசார் வரதனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |