Categories
மாநில செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்…. போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கை….!!!!

போக்குவரத்து துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார்.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதம்  தமிழ்நாட்டில் இருந்து  ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருந்து செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஏராளமான பக்தர்கள் மாலை போடுகின்றனர். இதனால் இன்று மாலை நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள்  தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது குறித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின் போது தமிழகத்தில் இருந்து  பக்தர்கள் சென்று வர ஏதுவாக முக்கிய நகரங்களில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் இன்று முதல் 20.1.2023 அன்று   வரை சென்னை, திருச்சி, மதுரை, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் அதிநவீன சொகுசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதனை தவிர்த்து கூடுதல் பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் செல்ல விரும்பும் பயணிகள் WWW.tnstc.in என்ற இணையதளத்தின் மூலமும் அல்லது TNSTC எந்த செயலி மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 94450-14452,94450-17793 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |