Categories
தேசிய செய்திகள்

சபரிமலை கோவில்: புதிய திட்டம் தொடக்கம்…. பக்தர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அன்னதானம் மற்றும் புண்ணிய பூங்கா திட்டம் துவங்கப்பட்டு இருக்கிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தேவசம்போர்டு சார்பில் ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச அன்னதானம் வழங்கும் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை தேவசம் போர்டு அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன் துவங்கி வைத்தார். அதேபோன்று சபரிமலையை பிளாஸ்டிக் மற்றும் குப்பையிலிருந்து பாதுகாக்கும் அடிப்படையில் புண்ணிய பூங்காவனம் திட்டத்தையும் அமைச்சர் ராதாகிருஷ்ணன் துவங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |