நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கேரளாவில் இன்றும் நாளையும் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப் படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இரு நாட்களிலும் அனைத்து பகுதிகளிலும் அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும். மேலும் பாதிப்பு 6% முதல் 12% வரை உள்ள பகுதிகளில் மற்ற நாட்களில் அத்தியாவசிய கடைகள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் என தெரிவித்துள்ளது