Categories
மாநில செய்திகள்

சனிக்கிழமையும் இனி தடை…. தமிழக அரசு புதிய பரபரப்பு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமலுக்கு வந்தது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று  முதல் பல கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு என்று அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து சனிக்கிழமைகளில் மீன் மார்க்கெட், மீன் கடைகள் மற்றும் கோழிக் கறிக் கடைகள் உள்ளிட்ட கறிக் கடைகள் இயங்காது. மீறுவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை போதும் ஊடகத்தால் சனிக்கிழமை இறைச்சி மற்றும் மீன் கடைகளில் சமூக இடைவெளி இன்றி மக்கள் குவிவதால் சனிக்கிழமையிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |