Categories
தேனி மாவட்ட செய்திகள்

சந்தேகத்தால் வந்த பிரச்சனை… கணவன் செய்த காரியம்… தேனியில் பரபரப்பு…!!

சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்திய கணவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் தபால் நிலைய ஓடை தெருவில் பாண்டிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். டீக்கடை தொழிலாளியான இவருக்கு கமலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாண்டியாராஜ் மனைவி மீது சந்தேகப்பட்டதால் கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 5 மாதத்திற்கு முன்பு கணவனை பிரிந்து கமலா மதுராபுரியில் தனியாக வசித்து வந்துள்ளார். தற்போது இவர் தேனியில் உள்ள ஒரு தையல் கூடத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இதனையடுத்து நேற்று கமலா வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு பெரியகுளம் சாலை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்துள்ளார். அங்கு சென்ற பாண்டியராஜ் கமலாவை வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பாண்டியராஜை மடக்கி பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனைதொடர்ந்து படுகாயமடைந்த கமலை மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து பாண்டியராஜனை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |