கருப்பு கொண்டக்கடலை – 150 கி
பெரிய வெங்காயம் – 1
பூண்டு (நசுக்கியது) – 3 பல்
தக்காளி – 2
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
அரைக்க தேவையானவை:
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
கசகசா – கால் டீஸ்பூன்
முந்திரி (விரும்பினால்) – 5
தாளிக்க தேவையானவை:
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
பட்டை – 1 துண்டு
சோம்பு – 1 டீஸ்பூன்
கருவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
முதலில் கொண்டைகடலையை குறைந்தது எட்டு மணி நேரம் ஊற வைத்து, தேவையானஅளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். பின் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின்பு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பிறகு வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் மசாலா பொடிகளை சேர்த்து வதக்கி, வேக வைத்த கொண்டைகடலை சேர்த்து, 1 கப் தண்ணீர் விட்டு மூடி கொதிக்க விடவும்.
பிறகு உப்பு மற்றும் அரைத்த மசாலா, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். இந்த சுவையான கருப்பு கொண்டைக்கடலை கறியை சூடான சாதத்தில் கலந்து சாப்பிடவும், இட்லி, தோசை, ரொட்டி போன்ற டிபன் ஐட்டங்களுடன் சேர்த்து சாப்பிட மிக சுவையாக இருக்கும்.