ப்ரோக்கோலி பகோடா செய்ய தேவையான பொருட்கள்:
ப்ரோக்கோலி – 1 கப்
கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
பெருங்காயப் பொடி – 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா – கால் தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – பொரிக்க
செய்முறை:
முதலில் ப்ரோக்கோலியை நன்கு சுத்தம் செய்து, வெட்டி, பூக்களாகப் பிரித்து எடுக்கவும். அதே சமயம் பூக்கள் பெரியதாக இருக்கும் பட்சத்தில், சிறிதாக வெட்டி கொள்ளவும்.
பின் அதனை சூடான நீரில் சில நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு, பெருங்காயம் மற்றும் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும்.
அதனை தொடர்ந்து, வறுப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை கடாயில் ஊற்றி சூடானதும், அதில் ஒவ்வொரு பூவாக மாவில் முக்கி, சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து சூடாக பரிமாறவும். இப்போது சூப்பரான ப்ரோக்கோலி பகோடா ரெடி.