Categories
மாநில செய்திகள்

சத்துணவில் கெட்டுப்போன முட்டைகள் இருந்த விவகாரம்…. 3 பேர் பணி நீக்கம்…!!!

பள்ளியில் வழங்கப்படும் சத்துணவில் கெட்டுப்போன முட்டைகள் இருந்த விவகாரத்தில் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை அடுத்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டைகள் அழுகிய நிலையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு உணவு பொருட்கள் மற்றும் இருப்பு உள்ள முட்டைகளையும் தரம் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அனைத்து உணவுப் பொருட்களும் நல்ல நிலையில் உள்ளது. மேலும்  முட்டைகளை தண்ணீரில் இட்டு பரிசோதிக்கப்பட்டது அவை நல்ல நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த வாரம் வாங்கப்பட்ட முட்டைகளை உரிய காலத்தில் அளிக்காமல் கெட்டுப்போன முட்டைகளாக பள்ளியில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் தேன்மொழி, சமையல் பணியாளர் லட்சுமி மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியை தனலட்சுமி ஆகியோரை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Categories

Tech |