Categories
மாநில செய்திகள்

சதுரகிர செல்ல 4 நாட்கள் அனுமதி….. பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…!!!!

சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல நான்கு நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை  முன்னிட்டு வருகிற 15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு பக்தர்கள் கோவிலுக்கு செல்ல நிர்வாகம் அனுமதி அளித்திருக்கிறது. பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 11 மணி  வரை மட்டுமே மலை ஏறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு கொண்டு செல்லவும், பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கும் கோவில் நிர்வாகம் தடைவிதித்துள்ளது. கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Categories

Tech |