Categories
மாநில செய்திகள்

சதுரகிரி பக்தர்களுக்கு…. நாளை முதல்…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!

கார்த்திகை மாத பவுர்ணமியை ஒட்டி சதுரகிரி மலை கோவிலுக்கு நாளை முதல் டிசம்பர் 19 ஆம் தேதி வரை செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்.  இந்த கோவிலுக்கு மாதம்தோறும் அமாவாசைக்கு நான்கு நாட்கள், பிரதோஷத்திற்கு நான்கு நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும்.

தற்போது மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழையின் காரணமாக நீர்வரத்து அதிகமாக இருப்பதால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு கார்த்திகை மாதம் பிரதோஷம் மற்றும் அமாவாசை தினங்களில் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தற்போது மழை குறைந்துள்ளதால் கார்த்திகை மாதம் பவுர்ணமியையொட்டி சதுரகிரி மலை கோவிலுக்கு நாளை முதல் டிசம்பர் 19ஆம் தேதி வரை பக்தர்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் நீரோடைகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சதுரகிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |