சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி வழிபாட்டிற்காக டிசம்பர் 5ஆம் தேதி முதல் டிசம்பர் எட்டாம் தேதி வரை நான்கு நாட்கள் தினமும் காலையில் மழை சூழலை பொறுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அறிவித்துள்ளது. இந்த கோவிலில் கடந்த இரண்டு மாதங்களாக கன மழை காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு மலை ஏற அனுமதி வழங்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்த நிலையில் கார்த்திகை மாத பிரதோஷ நாளான இன்று முதல் டிசம்பர் எட்டாம் தேதி வரை நான்கு நாட்கள் தினம் மழை சூழ்நிலை பொருட்களை காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.