முன் விரோதம் காரணமாக இறுதி சடங்கிற்கு சென்றிருக்கும் இடத்தில் முதியவரை வாலிபர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளாபாளையம் பகுதியில் தங்கவேல் என்ற முதியவர் வசித்து வருகிறார். இவரது மருமகன் செந்தில்குமார் என்பவர் கருங்காளிபள்ளியில் வசித்து வருகிறார். இந்நிலையில் செந்தில்குமாரின் பெரியப்பா இறந்துவிட்டதால் தங்கவேல்பிள்ளை துக்கம் விசாரிப்பதற்காக அவர் வீட்டிற்கு இறுதி சடங்கின் போது சென்றுள்ளார். அப்போது செந்தில்குமார், தங்கவேல்பிள்ளை இருவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து வாக்குவாதம் கைகலப்பாக மாறி, செந்தில்குமார் தங்கவேல்பிள்ளையை தாக்கியுள்ளார். அதன் பின் பாதிக்கப்பட்ட தங்கவேல்பிள்ளை அருகில் உள்ள காவல் நிலையத்தில் செந்தில்குமாரின் மீது புகார் கொடுதுள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து செந்தில் குமாரை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.