Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள துவாரகாபுரி முருகன் கோவில் அருகில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் சரவணன், செந்தமிழ் மற்றும் தியாகராஜன் என்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளனர். அதன்பின் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 5000 ரூபாய் பணம் மற்றும் 450 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |