சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் தும்பக்கோடு பகுதியில் வசிக்கும் மாடசாமி என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்ட விரோதமான அப்பகுதியில் மது விற்பனை செய்துள்ளார்.
இதனை அடுத்து மாடசாமியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.