டிராக்டரில் மணல் கடத்த முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள மேல்துறையூர் கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சட்டவிரோதமாக பிராந்தமங்கலம் கால்வாயில் மணல் அள்ளி தனது டிராக்டரில் கடத்த முயன்றுள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் முருகேசனின் டிராக்டாரை சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது முருகேசன் மணல் கடத்தியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குபதிந்த காவல்துறையினர் முருகேசனை கைது செய்து அவரிடமிருந்து டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனர்.