Categories
தேனி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக விற்பனை…. வசமாக சிக்கிய நபர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி தெருவில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் வீரபாண்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது அங்கு ரகசியமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த அதே பகுதியை சேர்ந்த செல்லகாமு(32) என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |