Categories
உலக செய்திகள்

“சட்டப்படி இனி இந்த பணத்தாள்கள் செல்லாது”… மிக விரைவில் செலவிட வேண்டிய கட்டாயம்… பிரித்தானியர்களுக்கு கோரிக்கை…!!!!!

ஒரு வாரத்திற்குள் 20 பவுண்டுகள் மற்றும் 50 பவுண்டுகளுக்கான பணத்தாள்களை செலவிட வேண்டும் எனவும் புழக்கத்தில் இருந்து அவை நீக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. செப்டம்பர் 30-ஆம் தேதிக்குப்பின் குறித்த பணத்தாள்கள் கடைகளில் இனி ஏற்க மாட்டார்கள் எனவும் சட்டப்படி இனி அவை செல்லாது எனவும் குறிப்பிட்டு இருக்கின்றனர். இதனால் தற்போது அந்த பணத்தாள்களை மிக விரைவாக செலவிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் பிப்ரவரி 2020ல் வெளியிடப்பட்டு சுமார் இரண்டு வருடங்களாக புழக்கத்தில் இருக்கும் குறித்த பணத்தாள்களை நீக்க இருக்கின்றனர்.

மேலும் குறித்த பணத்தாள்களில் ஆதம் ஸ்மித், மேத்யூ போல்டன் மற்றும் ஜேம்ஸ் வாட் போன்றோரின் புகைப்படங்கள் கொண்ட பணத்தாள்கள் அவை எனக் கூறப்படுகின்றது. இந்த நிலையில் மக்கள் வங்கிகளில் செலுத்தியும் புதிய பணத்தாள்களை பெற்றுக் கொள்ளலாம் என கூறுகின்றனர். மேலும் இதற்கு மாறாக புதிதாக புழக்கத்தில் கொண்டு வர இருக்கும் 50 பவுண்டுகள் தாளில் Alan turing புகைப்படம் 20 பவுண்டுகள் தாளில் J.M.Turner புகைப்படமும் இருக்கும் என தெரிவிக்கின்றனர்.  பாலிமர் பணத்தால்கள் அதிக காலம் புழக்கத்தில் இருக்கும் என்பதனாலே தற்போதைய காகித பணத்தாள்களை நீக்குகின்றனர்.

Categories

Tech |