குடிபோதையில் கீழே விழுந்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரசோலை காமராஜர் நகரில் கூலித் தொழிலாளியான குமரேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குமரேசன் கோத்தகிரி கடைவீதி பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளார். இதனையடுத்து உழவர் சந்தைக்கு செல்லும் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக குமரேசன் கால் தவறி கீழே விழுந்து இறந்துவிட்டார். மறுநாள் காலை அவ்வழியாக சென்றவர்கள் குமரேசன் இறந்து கிடப்பதை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குமரேசனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.