Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சசிகலா குறித்து பேச அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மறுப்பு …!!

சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்தால் அரசியல் மாற்றம் வருமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஆர் வி உதயகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தேர்தலில் வழிகாட்டுதலின்படி தான் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார். உரிய பாதுகாப்புடன் ஜெயலலிதாவின் இலட்சியத்தையும் கொள்கையையும், முன் எடுத்துச் செல்ல கூட்டம் நடைபெறுவதாக தெரிவித்த அவர் சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் அரசியல் மாற்றம் வருமா என்று கேள்விக்கு அதுகுறித்து தன்னால் ஏதும் கூற முடியாது என தெரிவித்தார். வடகிழக்கு பருவமழையை மற்றும் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாகவும் பாடகர் எஸ்.பி.பி அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஆர்.வி உதயகுமார் தெரிவித்தார்

Categories

Tech |