சசிகலாவை முக்கிய அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சந்தித்து பேசியதாக டிடிவி தினகரன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன் பிறகு நேற்று முன்தினம் தமிழகம் திரும்பினார். அவரின் வருகையை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். அது மட்டுமன்றி சில பரபரப்பு சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சசிகலா சென்னை வந்ததும் எண்ணிடம் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் அழைத்து சசிகலாவின் உடல்நிலை குறித்து விசாரித்தார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பேசினார்களா என்பதை சொல்ல வேண்டாம் என நினைக்கிறேன். ஏனெனில் இதை வெளியில் சொல்லி தேவையில்லாமல் அவர்களுக்கு தான் பிரச்சனை வரும் என்று அவர் கூறியுள்ளார்.