விநாயகருக்கு சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரிய ஓடைப்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வன்னி விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு பால், பலம், தயிர், சந்தனம், திருநீர், பன்னீர் உள்ளிட்ட பல வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீ வன்னி விநாயகரை தரிசனம் செய்துள்ளனர்.