கேரளாவில் சகோதரனுக்கு whatsappபில் தகவல் அனுப்பிவிட்டு இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள விகாஸ் காலனியை சேர்ந்த ராஜன், ராணி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிரவீனா(20) என்ற மகளும் பிரவீன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று பிரவீனா வீட்டின் பின்புறம் உள்ள ஒரு குளத்திற்கு சென்றுள்ளார். குளத்தின் மேட்டுப்பகுதியில் நின்று கொண்டு சகோதரனுக்கு செல்போனில் whatsapp மூலம் நான் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போகின்றேன் என அனுப்பிவிட்டு அவர் குளத்தில் குதித்து விட்டார். இதனை அடுத்து சகோதரன் பிரவீன் மற்றும் உறவினர்கள் வீட்டின் பின்புறம் உள்ள குளத்தை நோக்க விரைந்து சென்றுள்ளனர். அப்போது அங்கு பிரவீனா குளத்து தண்ணீரில் மூழ்கிய படி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதனை அடுத்து அங்கிருந்து சிலர் குளத்தில் குதித்து தண்ணீரில் மூழ்கிய பிரவீனாவை மிக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. உடனடியாக இதுபற்றி பொதுமக்கள் பத்தேறி போலீஸர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பெயர் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குளத்தில் மூழ்கிய பிரவீனாவை ஒரு மணி நேரத்திற்கு பின் மீட்டுள்ளனர். அதன் பின் அவரை அந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனை அடுத்து அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.