Categories
மாநில செய்திகள்

கோவை மாணவி உடல் தகனம்… கதறும் பெற்றோர்கள்… கண்கலங்கவைக்கும் சம்பவம்…!!!

கோவையைச் சேர்ந்த 17 வயதான மாணவி அங்குள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அங்கு இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வரும் மிதுன் சக்கரவர்த்தி அந்த மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் அப்பள்ளியில் தொடர்ந்து படிக்க விரும்பாத அவர் வேறு பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்துள்ளார். இருப்பினும் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த 11ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன்னதாக அவர் எழுதிய கடிதத்தில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி உள்பட 3 பேரின் பெயர்களை குறிப்பிட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மாணவியின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் போக்சோ உள்ளிட்ட சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் தலைமறைவானர். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு இன்று பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.

முதலில் உயிரிழந்த மாணவியின் உடலை பிரேத பரிசோதனை முடித்த பிறகு வாங்க மறுத்து போராட்டம் செய்த உறவினர்கள் பின்னர் காவல்துறையினர் சமாதனம் செய்த பிறகு மாணவியின் உடலை வாங்கிக் கொண்டனர். இன்று கோவை மாணவியின் உடல் ஆத்துபாலம் பகுதியில் உள்ள மாநகராட்சி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Categories

Tech |