Categories
மாநில செய்திகள்

கோவை மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… மீண்டும் இயங்கும் உதய் எக்ஸ்பிரஸ்…!!!!!

கோவை -பெங்களூர் மற்றும் பெங்களூர் -கோவை இடையே உதய் எக்ஸ்பிரஸ் மீண்டும் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கோவை – பெங்களூர், பெங்களூர் – கோவை இடையே இயக்கப்பட்ட உதய் இரண்டடுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்து. கோவை பெங்களூர் புதிய எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி அடுத்த மாதம் மார்ச் 31-ஆம் தேதி முதல் புதன்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும்.

இந்த ரயில்கோவை  நிலையத்திலிருந்து காலை புறப்பட்டு சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வந்து வந்து சேரும். பின் இங்கிருந்து குப்பம்   கிருஷ்ணராஜபுரம் வழியாக பெங்களூர்  ரயில் நிலையத்திற்கு  சென்றடையும். இதேபோல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் பெங்களூர் கோவை எக்ஸ்பிரஸ் அடுத்த மாதம் மார்ச் 31-ஆம் தேதி முதல் புதன் கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Categories

Tech |