Categories
மாநில செய்திகள்

கோவை இரட்டை கழிப்பிட சர்ச்சை….. இதுதான் காரணம்….. மாநகராட்சி வெளியிட்ட விளக்கம்……!!!!

கோவை மாநகராட்சியின் 66 ஆவது வார்டு அம்மன் குளம் பகுதியில் கட்டப்பட்டுள்ள பொது கழிப்பிடத்தின் இடையே சுவர் இல்லாமல் ஒரே அறையில் இரண்டு மலம் கழிக்கும் சிங்க் இருந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இது குறித்து கோவை மாநகராட்சி பொறுப்பு ஆணையர் ஷர்மிளா வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்த கழிப்பிடம் 1995 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதில் ஆண் மற்றும் பெண் என இருப்பாலாருக்கும் கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் சிறுவர்களுக்கு கழிப்பட வசதி செய்யப்பட்டுள்ளது.

அதாவது, சிறுவர்களுக்கான கழிப்பிடத்தில், சிறுவர்கள் பெரியவர்களின் கண்காணிப்பில் கழிப்பிடத்தை உபயோகப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் கதவுகள் இருந்தால் குழந்தைகளால் உள்புறம் தாழிட்ட பின் திறந்து வெளியே வர இயலாது என்பதால் பொருத்தப்படவில்லை. அதனை தொடர்ந்து இந்த கழிப்பிடத்தில் உள்ள பழுதுகளை நீக்கி பராமரிப்பு செய்ய ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. சிறுவர்கள் உபயோகப்படுத்த அமைக்கப்பட்ட கழிப்பிட உபயோக இல்லாமல் இருப்பதால் அவைகளை பெரியவர்களுக்கான சிறுநீர் கழிப்பிடமாக மாற்ற ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் படி சிறுவர்களுக்கான கழிப்பிடத்தை பெரியவர்களுக்கான சிறுநீர் கழிப்பிடமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |