கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வ உ சி மைதானத்தில் ஸ்வநீதி மஹோத்ஸவ் என்னும் தலைப்பில் சுயசார்பு சாலையோர கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சாலையோர வியாபாரிகள் பலரும் ஸ்டால்கள் அமைத்து தங்களது பொருட்களை விற்பனை செய்துள்ளனர். மேலும் சாலையோர சிற்றுண்டி உணவு வகைகள் மகளிர் சுய உதவி குழுக்களின் பொருட்கள் கண்காட்சி போன்றவை இடம் பெற்றிருந்தது. இந்த நிகழ்வை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீநிவாசன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் போன்ற தொடங்கி வைத்தனர். இதில் மத்திய மற்றும் மாநில அரசின் கடன் பெற்று சிறப்பாக செயல்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் கடன் உதவிக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு கடன் தொகையும் வழங்கப்பட்டது.
அதன் பின் சாலையோர வியாபாரிகள் படும் கஷ்டங்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தில் முக்கியத்துவம் பற்றிய நாடகங்கள் மற்றும் நடனங்கள் அரங்கேற்றப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏ வானதி சீனிவாசன் சிறப்புரையாற்றியுள்ளார். அதாவது கொரோனா காலகட்டத்தில் பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களுக்கு பெரிதாக சிக்கல் ஏற்படவில்லை. ஆனால் தினசரி வேலைக்கு செல்லும் எளிய மக்கள்தான் பல்வேறு சிக்கல்களை மேற்கொண்டனர். இதனை கருத்தில் கொண்டு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 20 கோடி ரூபாய் மதிப்பில் ஆத்ம நிருபர் எனும் திட்டத்தை அறிவித்துள்ளார். இதன் மூலமாக விவசாயிகள் சிறுகுறி தொழில் நிறுவனத்தினால் பெண்கள் என அனைத்து தரப்பினருக்கும் பயனடைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக இலவச கேஸ் சிலிண்டர் இலவசமாக 5 கிலோ அரிசி மற்றும் பருப்பு வகைகள் போன்றவை மத்திய அரசால் வழங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் சாலை வர வியாபாரிகளை இணைத்து அடையாள அட்டை ஆதார் அட்டையின் மூலமாக ரூபாய் 10,000 அவர்களது வங்கி கணக்கு நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் பேசும்போது சாலையோர வியாபாரிகள் பல்வேறு பிரச்சினைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை சரி செய்யும் விதமாக கோவை மாநகராட்சி சார்பில் குறிப்பிட்ட இடங்களில் சாலையோர வியாபாரிகள் கடை நடத்தலாம் எனவும் குறிப்பிட்ட இடங்களில் கடை அமைக்க கூடாது எனவும் அறிவித்துள்ளனர்.
ஆனால் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சாலை வர வியாபாரிகள் கடை அமைக்க கூடாது என சொல்வது சரியாக இருக்காது இதனை மாநகராட்சி கருத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இதனை தொடர்ந்து பேசிய மேயர் கல்பனா ஆனந்தகுமார் சன்னிதி திட்டத்தில் கோவை மாநகராட்சியில் உள்ள சாலையோர வியாபாரிகளை கண்டறிவதற்கு 15,450 இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் 11 ஆயிரம் பயனாளிகளுக்கு பத்தாயிரம் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. முதல் தவணை முடித்த 2,500 பயனாளிகளுக்கு இரண்டாம் கட்டமாக 20 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஸ்வநீதி திட்டத்தில் ஜூலை 15 முதல் அடுத்த 45 நாட்களுக்கு கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலும் கடன் வழங்கும் முகாம் நடைபெறுகிறது. இதில் சாலையோர வியாபாரிகள் மற்றும் சுய உதவி குழுக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் உங்கள் வளர்ச்சியில் கோயம்புத்தூர் மாநகராட்சியும் தமிழ்நாடு அரசும் என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என கூறியுள்ளார்.