Categories
மாநில செய்திகள்

கோவையிலிருந்து முதல் தனியார் ரயில்…. 3 மடங்கு கட்டணம் உயர்வு…. ஷாக் நியூஸ்….!!!!

கோயம்புத்தூரிலிருந்து சீரடிக்கு இயக்கப்படும் முதல் தனியார் ரயிலில் கட்டணம் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தனியார் மயமாக்கல் செயல்பாட்டை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் 12ஆம் தேதி மாலை 6 மணிக்கு வடகோவையிலிருந்து சீரடிக்கு முதல் தனியார்ரயில் இயங்க ரயில்வே அனுமதித்து இருக்கிறது. கோவையைச் சேர்ந்த எம்.என்.சி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் எனும் நிறுவனம் இதனை இயக்க உள்ளது. ரயில்வண்டியானது ரயில்வேக்கு சொந்தம். அதேபோல் தண்டவாளம், சிக்னல், நடை மேடை ரயில்வேக்கு சொந்தம் ஆகும். ரயில்வே டிரைவர் காட்வண்டியை இயக்குவார்கள்.

எனினும் டிக்கெட் விற்பனை, பயணிகளை பரிசோதிப்பது போன்ற அனைத்தும் தனியாருக்கு ஆகும். மேலும் டிக்கெட் விற்பனையானது தனியாருக்கு, கட்டணம் அவர்கள் விருப்பம் போல் வைத்துக்கொள்ள அனுமதி. கோவையிலிருந்து சீரடிக்கு போக 1458 கிலோ மீட்டர்  தூரத்துக்கு ஸ்லீப்பர் கட்டணம் ரூ 1,280ஆகும். ஆனால் அவர்கள் வசூலிப்பது 2500 ரூபாய் ஆகும். மூன்று அடுக்கு குளிர்சாதன படுக்கைக்கு ரயில்வே கட்டணம் ரூபாய் 2,360, தனியார் கட்டணம் ரூபாய் 5000 ஆகும். அதன்பின் குளிர்சாதனம் இரண்டு அடுக்கு படுக்கைக்கு ரயில்வே கட்டணமானது ரூபாய்.4,820, தனியார் கட்டணம் ரூபாய்.7000 ஆகும். குளிர்சாதனம் முதல்வகுப்பு படுக்கைக்கு ரயில்வே கட்டணமானது ரூபாய்.8,190, தனியார் கட்டணம் ரூ.10000 ஆகும்.

அந்த வகையில் ஸ்லீப்பர் கட்டணம் இரண்டு மடங்கு, குளிர்சாதன படுக்கை மூன்றடுக்கு இரண்டடுக்கு போன்றவை ஒன்னரை மடங்கு, முதல் வகுப்பு ஒண்ணேகால் மடங்கு  கட்டணக்கொள்ளை. இதில் தனியாருக்கு உரிமைகட்டணம் முன் நாற்பது லட்சம் என தீர்மானித்து பின், அதிலும் 11லட்சம் குறைவாக வசூலிப்பது ரயில்வேயின் வருமானத்தை பாதிக்கவில்லையா..? இதனிடையில் நாங்கள் சாதாரண மக்கள் பயன்படுத்தும் ரயில்வேயை தனியாரிடம் விடக்கூடாது என வலியுறுத்தி வருகிறோம். ரயில்வே அமைச்சர் சமீபத்தில் சென்னை வந்த போது ரயில்வேயில் தனியார்மயம் கிடையாது என அடித்து கூறினார். அதற்கு மாற்றாக முதல் தனியார்ரயிலை தமிழகத்திலிருந்து இயக்குவது வன்மையான கண்டனத்துக்கு உரியது ஆகும்.

தனியார் ரயில் எனில் ஒருகட்டண சலுகையுமில்லை. மேலும் முதியோர்களுக்கான கட்டண சலுகையும் கிடையாது. அத்துடன் ரயில்வேயை போன்று ஒன்றரைமடங்கு முதல் 2 மடங்கு வரை கட்டணம் உயர்வு. இது தான் தனியார்மயம் ஆகும். இந்நிலையைல் இந்திய ரயில்வே தேசிய ரயில் திட்டம் அறிவித்துள்ளது. அந்த அடிப்படையில் அனைத்து லாபம் வரும் பயணி வண்டிகளும் தனியாருக்கு 2031-க்குள் தாரை வார்க்கப்படும். அதுமட்டுமின்றி அனைத்து சரக்கு ரயில்களும் 2031-க்குள் தனியாருக்கு தாரை வார்க்கப்படும். அவ்வாறு தனியாருக்கு தாரை வார்த்தால் கட்டணங்கள் அதிகரிக்கும். சலுகைகள் பறிபோகும் என்பதன் எடுத்துக்காட்டுதான் சீரடி ரயில் ஆகும். ஆகவே கோவை டூ சீரடி ரயிலை  ரயில்வே நிர்வாகமே எடுத்துநடத்திட வேண்டும்” என வலியுறுத்தி இருக்கிறார்.

 

Categories

Tech |