Categories
தேசிய செய்திகள்

கோவில் நுழைவு வாயில் நித்தியானந்தா உருவம் கொண்ட சிலை…. அதிர்ச்சியில் உறைந்த பக்தர்கள்….!!!!

புதுச்சேரி மாநிலம் குருமாம்பேட் அருகேயுள்ள பெரம்பையில் நித்தியானந்தாவின் சீடரான பால சுப்பிரமணியம் என்பவர் மலேசிய முருகன் கோயில் போல் இங்கு ஒரு கோவிலைக் கட்டிவந்தார். இந்த கோயிலில் 27 அடியில் முருகன் சிலை பிரமாண்டமாக கட்டிமுடிக்கப்பட்டு ஸ்ரீ பத்துமலை முருகன் ஆலயம் என பெயரிடப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடந்தது. இதேபோல் கோயிலின் நுழைவுவாயிலில் 18 அடி உயரத்தில் நித்தியானந்தா உருவம் கொண்ட பிரம்மாண்ட சிலையானது காணப்பட்டது. இச்சிலைக்கும் இன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இந்த சிலையை கண்டதும் காவல் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். முன்னதாகவே நித்யானந்தா சிவன்போல் வேடமணிந்து கையில் சூலத்துடன் தோன்றிய காட்சியைப் போன்று இந்த சிலை இருந்தது. இது தொடர்பாக கோவில் கும்பாபிஷேகம் செய்த சிவாச்சாரியார்களிடம் கேட்டபோது, இது சிவனின் மற்றொரு அவதாரமான காலபைரவர். அத்துடன் ஸ்தபதி சிலையை முறையாக வடிவமைக்காததால் இப்படி இருக்கிறது என கூறினர். அதன்பின் கோவில் நிர்வாகி, பால சுப்பிரமணியன் அறைக்கு சென்று பார்த்தார்.

அப்போது அறை முழுவதும் நித்தியானந்தா அவருக்கு ஆசி வழங்குவதும், நித்தியானந்தா புகைப்படத்தை ஓவியமாக தீட்டி வைத்திருப்பதும் போன்ற புகைப்படங்கள் இருந்தது. முன்பே நித்தியானந்தா படங்களை வைத்து அவர் பூஜித்து வந்ததும் தெரியவந்தது. இதனிடையில் பாதுகாப்பு பணிக்குவந்த காவல்துறையினர் நித்தியானந்தா சிலையை ஆச்சரியத்துடன் பார்த்தனர். பின் பக்தர்களும் அந்த சிலையின் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இவ்வாறு நித்தியானந்தா சீடர் முருகன் கோயில் கட்டி, அங்கு 18 அடியில் நித்தியானந்தா சிலையை நிறுவி கும்பாபிஷேகம் செய்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |