Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோவில் திருவிழாவிற்கு வந்த தம்பி…. அக்காவிற்கு நடந்த கொடூரம்…. சிவகங்கையில் பரபரப்பு…!!

அக்காவை கம்பியால் அடித்து  தம்பி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோனார்பட்டி கிராமத்தில் உதயசூர்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில்  பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் உதயசூர்யாவின்  தம்பியான ஆசைக்கண்ணன் என்பவர் தனது  மனைவியுடன்  கோவில் திருவிழாவிற்காக  சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் உதயசூர்யா ஆசைக்கண்னனை  திட்டியதால் கோபமடைந்த  அவர் அருகில் இருந்த  இரும்பு கம்பியால் தனது  அக்காவை  சரமாரியாக   தாக்கியுள்ளார். இதனால்  படுகாயமடைந்த உதயசூர்யா  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பூவந்தி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உதயசூரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுக்குறித்து வழக்கு பதிவு  செய்த காவல்துறையினர்  அசைக்கண்னனை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |