Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கோவில்பட்டியில் கல்லூரி பேராசிரியரை தாக்கிய 3 மாணவர்கள்”…. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை….!!!!!

கோவில்பட்டியில் கல்லூரி பேராசிரியரை தாக்கிய வழக்கில் மாணவர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இருக்கின்றது. இங்கு சிவசங்கரன் என்பவர் கணித துறை பேராசிரியராக பணியாற்றி வருகின்றார். இவர், அந்த கல்லூரியில் பயிலும் ஒரு மாணவர் மாணவியை காதலித்து வந்ததாக சொல்லப்பட்ட நிலையில் அதை அறிந்த சிவசங்கரன் மாணவரை அழைத்து அறிவுறுத்தி இருக்கின்றார். இந்நிலையில் சிவசங்கரன் நேற்று முன்தினம் தனது அலுவலக அறையில் இருந்தபோது அக்கல்லுரியில் படிக்கும் மாணவர்கள் இரண்டு பேர் அவரின் அறைக்குள் நுழைந்து அவரை தாக்கியுள்ளனர்.

இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இதையடுத்து சிவசங்கரன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் தாக்குதல் நடத்திய இரண்டு மாணவர்கள் உட்பட மேலும் ஒரு மாணவர் மீது அவதூறாக பேசுதல், வன்கொடுமை உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பாக கல்லூரி முதல்வர் விசாரணை நடத்தி இரண்டு மாணவர்களை சஸ்பெண்ட் செய்ததுள்ளார். மேலும் கல்லூரி கல்வி இயக்குனரகம் விசாரணை செய்து பேராசிரியர் சிவசங்கரனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளது.

Categories

Tech |