கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நெல்லிதோப்பு கிராமத்தில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 1.12 ஏக்கர் விலை நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் நாகையா, ஆலய நிலங்கள் தாசில்தார் சங்கர் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 1.12 ஏக்கர் கோவில் நிலத்தை மீட்டனர்.
மேலும் இந்த இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது. இதை யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் அங்கு அறிவிப்பு பலகை வைத்தனர். மீட்கப்பட்ட கோவில் நிலத்தின் மதிப்பு சுமார் 15 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.