பெண்ணிடமிருந்து தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற இரண்டு பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மீனாட்சிநகர் பகுதியில் அருணாதேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தினமும் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் அருணாதேவி கோவிலுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் அருணாதேவி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து அருணாதேவி சிவகங்கை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.