Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற தம்பதியினர்…. வழியில் நேர்ந்த கொடூரம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறியதில் கணவன் மனைவி கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கமலச்செரி போஸ்ட் பகுதியில் எலக்ட்ரிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை அருண் என்பவர் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி அருண் தனது மனைவி அஞ்சுவுடன் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

இதனையடுத்து போடிமெட்டு அருகே மணப்பட்டியில் விட்டு இருசக்கர வாகனம் திடீரென நிலைதடுமாறி கணவன்-மனைவி இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இருவரையும் மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைதொடர்ந்து அருணை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அருண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தற்போது அஞ்சுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து குரங்கணி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |