சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் இசக்கி அம்மன் கோவில் அருகில் ஒரு பையுடன் நின்று கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் வள்ளியூரில் வசிக்கும் விஷ்ணு என்பது தெரியவந்துள்ளது.
மேலும் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து விஷ்ணுவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.