ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் என்ற பகுதியில் உள்ள சர்வேஷ்வர் மகாதேவ் கோயிலில் பூசாரியாக இருப்பவர் கோயிலுக்குள் பெண் ஒருவருடன் தனிமையில் இருந்துள்ளார். இதை பார்த்த ஊர்மக்கள் இருவரையும் வெளியே இழுத்து செருப்பால் அடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். பூசாரி உடன் இறந்த பெண்ணின் ஆடைகளை கிழித்து அவரை கீழே தள்ளியும் தாக்கினர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இது சம்பந்தமாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில் என்னுடைய நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் எனது ஆடைகளை கிழித்து அவமானப்படுத்தியதாக தெரிவித்துள்ளார். பூசாரி குடும்பத்துடன் நாங்கள் நல்ல உறவு வைத்திருக்கிறோம். சம்பவ தினத்தன்று கோவில் பூசாரியின் மனைவி வருவதற்காக காத்திருந்தோம் என்று தெரிவித்துள்ளார். அதை தவறாக புரிந்து கொண்ட மக்கள் எங்களை தாக்கி அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு எங்களின் பெயரை கெடுத்து விட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தால் எங்கள் குடும்பத்தினர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். கோவிலுக்குள் நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றும், எங்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபடுவேன் எனவும் அவர் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தனது கணவருடன் வந்து காவல் நிலையத்தில் இந்த புகாரை அளித்துள்ளார்.