கோவிலில் இருந்து பூஜை பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம், மேலூரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.அந்த கோவிலின் கீழ் பகுதியில் இருந்த அறையில் பூஜை பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது .
இதை அறிந்த சில மர்ம நபர்கள் கோவில் அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பித்தளைபாத்திரம், பூஜை விளக்கு சாமான்கள், மற்றும் பித்தளை குடம் போன்ற பொருட்களை திருடி சென்றுள்ளனர்.
திருடுபோன பொருட்கள் சுமார் 120 கிலோ இருக்கும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்துபோலீசில் புகார்அளிக்கப்பட்டதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.