நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் கொரோனா மீண்டும் பரவி வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. ராமதாசு வலியுறுத்தியுள்ளார்.