Categories
உலக செய்திகள்

கோவாவில் ஜூன் 7-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு…. அதிரடி உத்தரவு….!!!

இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவாவில் கொரோனா ஊரடங்கு மே 31 ஆம் தேதியன்று முடிவுக்கு வர உள்ள நிலையில், அங்கு கொரோணா பரவல்  குறையாத காரணத்தால் ஜூன் 7-ஆம் தேதி காலை 7 மணி வரை ஊரடங்கை நீட்டிப்பு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது வரை 15,326 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 2,570 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |