சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு சவுமிய நாராயண பெருமாள் தங்கப்பல்லக்கில் எழுந்தருளினார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் சிறப்பு வாய்ந்த சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொரோனா தொற்று காரணமாக சித்திரை திருவிழா இந்த வருடம் கோவில் வளாகத்துக்குள்ளேயே நடைபெற்று வருகிறது. மேலும் கடந்த 17-ஆம் தேதி கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று வருகிறது.
அதனை தொடர்ந்து கோவிலுக்குள் வாகன புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து தங்கப்பல்லக்கில் சாமி புறப்பாடு பக்தர்கள் இன்றி நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் அலங்கரிக்கப்பட்ட பூதேவி, ஸ்ரீதேவி சமேத நாராயண பெருமாள் எழுந்தருளினார். இதையடுத்து தொடர்ந்து திருவிழா நடைபெற்று வருகிறது.