ஆப்கானிஸ்தானில் கார்கள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் சிக்கி 5 பேர் பலியான சம்பவம் குறித்து காவல் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள தவுலத் அபாத் என்னும் மாவட்டத்திலேயே இந்த கோர விபத்து அரங்கேறியுள்ளது. அதன்படி 2 கார்கள் ஒன்றோடொன்று அதி பயங்கரமாக மோதியுள்ளது.
இதில் சிக்கி தேசிய புள்ளியியல் மற்றும் தகவல் ஆணைய தலைவரான ஜாம்ஷித் உட்பட 5 பேர் பலியாகியுள்ள நிலையில் 9 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். இந்த விபத்து குறித்து காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.