அமெரிக்காவில் மூன்று மாகாணங்களில் சூறாவளி காற்று மற்றும் கன மழை பெய்து வருகின்றது.
அமெரிக்கா நாட்டில் மிஸ்சஸ்சபி, புளோரிடா, கான்சாஸ் போன்ற மாகாணங்கள் அமைந்துள்ளன. இந்நிலையில் இந்த மாகாணத்தில் தற்போது சூறாவளி காற்று மற்றும் கனமழை பெய்து வருகின்றது. இதனால் கான்சாஸ் மாகாணத்தில் விழுந்த மின்னல் பயங்கர வெளிச்சத்துடன் மீண்டும் மீண்டும் எழும்பியுள்ளது.
இதனைத் தொடர்ந்து உயரமான கட்டிடத்தில் மின் காந்த கம்பியின் மீது உரசி மீண்டும் மேகங்களில் மின்னல் ஊடுருவி வருகின்றன. மேலும் பாதசாரி ஒருவர் தன் வீட்டில் இருந்தவாறு கொட்டும் கனமழை மின்னல் போன்ற நிகழ்வுகளை வீடியோ மூலமாக படமாக்கி இணையத்தில் வெளியிட்டுள்ளார்.