Categories
மாநில செய்திகள்

கோயம்பேடு சந்தைக்கு வரத்து அதிகரிப்பு…. தக்காளி விலை குறைந்தது…. பொதுமக்கள் நிம்மதி….!!!!

வரத்து அதிகரிப்பால் கோயம்பேடு மொத்த காய்கறி விற்பனை அங்காடிகளில் தக்காளி விலை குறைந்து வருகிறது.

வெளிமாநிலங்களில் இருந்து வரவேண்டிய தக்காளி லாரிகள் போதுமான அளவு கோயம்பேடு வர தொடங்கியுள்ளன. இதனால் மொத்த விலையில் 1 கிலோ தக்காளி 35 முதல் 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில்லரை விற்பனையில் 1 கிலோ தக்காளி 50 முதல் 60 ரூபாயாக குறைந்திருக்கிறது. சில்லறை விற்பனையில் 1 கிலோ தக்காளி 60 ரூபாய்க்கும் 1 கிலோ வெங்காயம் 40 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

சின்ன வெங்காயம் 1 கிலோ 65 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் கேரட், பீன்ஸ், அவரைக்காய் ஆகியவற்றின் விலை சற்றே குறைந்திருக்கிறது. நேற்று 70 ரூபாய்க்கு விற்பனையான 1 கிலோ கேரட் இன்று 60 ரூபாய்க்கும், நேற்று 60 ரூபாய்க்கு விற்பனையான 1 கிலோ பெண் இன்று 55 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அவரைக்காய் நேற்றை விட 10 ரூபாய் விலை குறைந்து 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

உருளைக்கிழங்கு விலையில் மாற்றமின்றி 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்று 35 ரூபாய்க்கு விற்பனையான 1 கிலோ பச்சைமிளகாய் இன்று 55 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இதேபோல நாகர்கோவில் சந்தையிலும் தக்காளி வரத்து அதிகரித்திருப்பதால் விலை குறைந்துள்ளது. இன்று 1 கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் மேலும் விலை குறையும் என்று வணிகர்கள் தெரிவித்துள்ளனர். தக்காளி விலை குறைந்து வருவதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Categories

Tech |