மலையில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மலைக்குன்று என்ற மலை அமைத்துள்ளது. இந்நிலையில் மலையில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக கேட்டாம்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் மலையிலுள்ள பல்வேறு மரங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இதனால் மலை அடிவாரத்தில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ பற்றியதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.